நம்ம ஊருல ......
டேய் வாடா தம்பி... காவல் நிலையம் போய் ஒரு புகார் கொடுத்திட்டு வந்திரலாம்.
அய்யா ஏட்டைய்யா... எவனோ வீட்டுக்குள்ள புகுந்து நம்ம வீடியோ கேமரா -வை திருடிட்டு போய்ட்டான்.
அப்படியா தம்பி... அது என்ன விலை இருக்கும்.
அது ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புங்கய்யா. தம்பி இப்போ வெளி நாட்டில் இருந்து வர்றதுக்கு முந்தின நாள் தான் வாங்கி இருக்காருங்க.
அப்படியா. அட பாவமே... சப் - இன்ஸ்பெக்டர் வரட்டும். கொஞ்சம் காத்திருங்க..
ரெண்டு மணி நேரம் ஆச்சு..
ஏட்டையா, சப்-இன்ஸ்பெக்டர் எப்ப வருவாருங்க ...
அது எப்பன்னு சொல்ல முடியாதுப்பா .. நான் என்ன ஜோசியமா பாக்குறேன் ..
கம்ப்ளைன்ட் எழுத பேப்பர் இல்ல ... போய் ரெண்டு குயர் பேப்பரும் நாலு ஹீரோ பேனாவும் வாங்கிட்டு வாங்க...
சப்-இன்ஸ்பெக்டர் வந்தார்... மூணு மணி நேரம் கழிச்சு..
தம்பி ஒரு ஐயாயிரம் ருபாய் செலவாகும் தேடறதுக்கு ... ஏட்டையா கிட்ட பணத்த குடுத்திட்டு போங்க ...மாடல் நம்பர் , சீரியல் நம்பர் , ஜாதகம் எல்லாம் குடுத்திட்டு போங்க..
ஆறு மாதம் கழித்து ...
தம்பி, உங்க பொருள் கிடைச்சிருச்சு.... கோர்ட் க்கு போய் ஜட்ஜ் அய்யா கிட்ட கேஸ் வந்ததும் வாங்கிரலாம்.. கோர்ட்டுக்கு அடிக்கடி போய் வரணும்..ஒரு பத்தாயிரம் செலவாகும்....
ஒரு வருஷம் கழித்து ....
தம்பி அது உங்க பொருள் இல்லப்பா... வேற மாடல்.. இன்னும் ஒரு ஐயாயிரம் ருபாய் செலவாகும் ... வெளி நாட்டில தான வேலை .. ரொம்ப அதிகம் கேக்கலை உங்க கிட்ட ....
அட போங்க சார் .. அந்த பொருளே இப்ப பத்தாயிரத்துக்கு கெடைக்குது (மனசுக்குள்ள....போடாங்கொய்யால .. நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்)
அமெரிக்காவில ...
போலீஸ் ஸ்டேஷன் கு போன் ....
அய்யா.. நேத்து ராத்திரி என்னோட கார் கண்ணாடிய ஒடச்சு போன், கிரெடிட் கார்டுகள், GPS கருவி எல்லாம் யாரோ எடுத்திட்டு போய்ட்டாங்கய்யா ...
அப்படியா.. ஐயோ பாவமே .. உங்க முகவரி சொல்லுங்க .. வீட்டுக்கு ஒரு அதிகாரி வருவார் ... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள....
பதினஞ்சு நிமிஷதுக்குள்ள...
வீட்டுக்கு அதிகாரி வந்தார்..
சார்... இந்த பேப்பர்ல என்ன நடந்துச்சு ...என்னென்ன பொருள் தொலைஞ்சு போச்சு.. என்ன விலை இருக்கும்னு எழுதி கொடுங்க.. கிரிடிட் கார்டு நம்பர் எல்லாம் எழுதி குடுங்க.. உடனே எல்லா கார்டு-ஐயும் கேன்சல் பண்ணிருங்க..
ரெண்டு நாள் கழிச்சு ...
போலீஸ் அதிகாரியிடம் இருந்து போன் கால் ...
கண்காணிப்பு கருவில உங்க கிரெடிட் கார்டு உபயோகித்த நபர் முகம் பதிவாகி உள்ளது.. விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்று நம்புகிறோம்.
மூன்று வாரம் கழிச்சு ...
திருடனை பிடித்து விட்டோம் ... உங்கள் போன் கிடைத்து விட்டது .. இன்று மதியம் நான் உங்கள் வீட்டிற்க்கு வந்து கொடுத்து விடுகிறேன் ..
வந்தார் ..கொடுத்து விட்டு போனார்..
கிரெடிட் கார்டு, GPS கருவிகளை உங்களுக்கு வசதிப்படும் பொழுது வந்து வாங்கிக்கொள்ளுங்கள் ..
கையெழுத்து வாங்கிக்கொண்டு பத்து நிமிடத்தில் கொடுத்து விட்டார்கள்
சுய முகவரியிட்ட கவர் வீட்டுக்கு அனுப்பி அதில் வாக்கு மூலம் வாங்கி விட்டு, கேஸ் நடத்தி , திருடனை நான்கே வாரங்களில் களி திங்க அனுப்பி விட்டார்கள்..
இனி இரண்டு வருடங்கள் அரசு மரியாதை தான் அந்த திருடனுக்கு...
டிஸ்கி:
இது நம் நாட்டை குறை சொல்ல எழுதவில்லை .. உண்மை அனுபவம் ...
என்று நடக்கும் இது என் தாய் நாட்டில் ....ஒரு ஆதங்கமே ...
படிச்சிட்டு பிடிச்சிருந்தா எதாவது சொல்லிட்டுபோகனும் .. ஆமா .. இல்லன்னா... சாமி உங்க கண்ண குத்திரும் ... சொல்லிப்பிட்டேன் ...அம்புட்டுதான்...
டேய் வாடா தம்பி... காவல் நிலையம் போய் ஒரு புகார் கொடுத்திட்டு வந்திரலாம்.
அய்யா ஏட்டைய்யா... எவனோ வீட்டுக்குள்ள புகுந்து நம்ம வீடியோ கேமரா -வை திருடிட்டு போய்ட்டான்.
அப்படியா தம்பி... அது என்ன விலை இருக்கும்.
அது ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்புங்கய்யா. தம்பி இப்போ வெளி நாட்டில் இருந்து வர்றதுக்கு முந்தின நாள் தான் வாங்கி இருக்காருங்க.
அப்படியா. அட பாவமே... சப் - இன்ஸ்பெக்டர் வரட்டும். கொஞ்சம் காத்திருங்க..
ரெண்டு மணி நேரம் ஆச்சு..
ஏட்டையா, சப்-இன்ஸ்பெக்டர் எப்ப வருவாருங்க ...
அது எப்பன்னு சொல்ல முடியாதுப்பா .. நான் என்ன ஜோசியமா பாக்குறேன் ..
கம்ப்ளைன்ட் எழுத பேப்பர் இல்ல ... போய் ரெண்டு குயர் பேப்பரும் நாலு ஹீரோ பேனாவும் வாங்கிட்டு வாங்க...
சப்-இன்ஸ்பெக்டர் வந்தார்... மூணு மணி நேரம் கழிச்சு..
தம்பி ஒரு ஐயாயிரம் ருபாய் செலவாகும் தேடறதுக்கு ... ஏட்டையா கிட்ட பணத்த குடுத்திட்டு போங்க ...மாடல் நம்பர் , சீரியல் நம்பர் , ஜாதகம் எல்லாம் குடுத்திட்டு போங்க..
ஆறு மாதம் கழித்து ...
தம்பி, உங்க பொருள் கிடைச்சிருச்சு.... கோர்ட் க்கு போய் ஜட்ஜ் அய்யா கிட்ட கேஸ் வந்ததும் வாங்கிரலாம்.. கோர்ட்டுக்கு அடிக்கடி போய் வரணும்..ஒரு பத்தாயிரம் செலவாகும்....
ஒரு வருஷம் கழித்து ....
தம்பி அது உங்க பொருள் இல்லப்பா... வேற மாடல்.. இன்னும் ஒரு ஐயாயிரம் ருபாய் செலவாகும் ... வெளி நாட்டில தான வேலை .. ரொம்ப அதிகம் கேக்கலை உங்க கிட்ட ....
அட போங்க சார் .. அந்த பொருளே இப்ப பத்தாயிரத்துக்கு கெடைக்குது (மனசுக்குள்ள....போடாங்கொய்யால .. நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்)
அமெரிக்காவில ...
போலீஸ் ஸ்டேஷன் கு போன் ....
அய்யா.. நேத்து ராத்திரி என்னோட கார் கண்ணாடிய ஒடச்சு போன், கிரெடிட் கார்டுகள், GPS கருவி எல்லாம் யாரோ எடுத்திட்டு போய்ட்டாங்கய்யா ...
அப்படியா.. ஐயோ பாவமே .. உங்க முகவரி சொல்லுங்க .. வீட்டுக்கு ஒரு அதிகாரி வருவார் ... இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள....
பதினஞ்சு நிமிஷதுக்குள்ள...
வீட்டுக்கு அதிகாரி வந்தார்..
சார்... இந்த பேப்பர்ல என்ன நடந்துச்சு ...என்னென்ன பொருள் தொலைஞ்சு போச்சு.. என்ன விலை இருக்கும்னு எழுதி கொடுங்க.. கிரிடிட் கார்டு நம்பர் எல்லாம் எழுதி குடுங்க.. உடனே எல்லா கார்டு-ஐயும் கேன்சல் பண்ணிருங்க..
ரெண்டு நாள் கழிச்சு ...
போலீஸ் அதிகாரியிடம் இருந்து போன் கால் ...
கண்காணிப்பு கருவில உங்க கிரெடிட் கார்டு உபயோகித்த நபர் முகம் பதிவாகி உள்ளது.. விரைவில் கண்டு பிடித்து விடுவோம் என்று நம்புகிறோம்.
மூன்று வாரம் கழிச்சு ...
திருடனை பிடித்து விட்டோம் ... உங்கள் போன் கிடைத்து விட்டது .. இன்று மதியம் நான் உங்கள் வீட்டிற்க்கு வந்து கொடுத்து விடுகிறேன் ..
வந்தார் ..கொடுத்து விட்டு போனார்..
கிரெடிட் கார்டு, GPS கருவிகளை உங்களுக்கு வசதிப்படும் பொழுது வந்து வாங்கிக்கொள்ளுங்கள் ..
கையெழுத்து வாங்கிக்கொண்டு பத்து நிமிடத்தில் கொடுத்து விட்டார்கள்
சுய முகவரியிட்ட கவர் வீட்டுக்கு அனுப்பி அதில் வாக்கு மூலம் வாங்கி விட்டு, கேஸ் நடத்தி , திருடனை நான்கே வாரங்களில் களி திங்க அனுப்பி விட்டார்கள்..
இனி இரண்டு வருடங்கள் அரசு மரியாதை தான் அந்த திருடனுக்கு...
டிஸ்கி:
இது நம் நாட்டை குறை சொல்ல எழுதவில்லை .. உண்மை அனுபவம் ...
என்று நடக்கும் இது என் தாய் நாட்டில் ....ஒரு ஆதங்கமே ...
படிச்சிட்டு பிடிச்சிருந்தா எதாவது சொல்லிட்டுபோகனும் .. ஆமா .. இல்லன்னா... சாமி உங்க கண்ண குத்திரும் ... சொல்லிப்பிட்டேன் ...அம்புட்டுதான்...